4 மாதங்களில் 22 மரண தண்டனை! ஒரு நீதிபதியால் 100 கொலை வழக்குகள் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் 4 மாதங்களில் 10 வழக்குகளில் 22 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, மற்றைய 100 கொலை வழக்குகளை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் மரண தண்டனை குறித்த ஆண்டு அறிக்கையின்படி, 2025-ல் 20 வழக்குகளில் 28 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், நீதிபதி ரவிகுமார் திவாகர் தலைமையிலான முசாபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 4 மாதங்களிலேயே 10 கொலை வழக்குகளில் 22 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதனால், இந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்குகளில் மரண தண்டனை விதிக்கக் கூடும் என்ற அச்சம் வழக்குரைஞர்களிடையே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மரண தண்டனைகள் உடனடியாக அமல்படுத்தக் கூடியவை அல்ல. இந்திய சட்டத்தின்படி, அமர்வு நீதிமன்றத்தால் விதிக்கப்படும் மரண தண்டனையானது, உறுதி செய்யப்படுவதற்காக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மரண தண்டனை மிகவும் அரிதாக விதிவிலக்கான வழக்குகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், திவாகர் தலைமையிலான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுமார் 100 கொலை வழக்குகளை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. நிர்வாக உத்தரவின் பேரில் இந்த கொலை வழக்குகள் வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

